கனமழை எதிரொலி: சென்னையில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (08:04 IST)
கனமழை காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன என்பதும் சென்னையில் இருந்து கிளம்பும்போது விமானங்கள் தாமதமாக கிளம்பியது என்பதும் ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று இரண்டாவது நாளாகவும் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இலங்கை - சென்னை மற்றும் சென்னை - இலங்கை செல்லும் இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இலங்கை - சென்னை ஏர் இந்தியா விமானமும், அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானமும் தாமதமாக புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மழைநீர் தேங்கி இருக்கும் ரன்வே பகுதியில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments