Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னையில் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (08:04 IST)
கனமழை காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய பல விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன என்பதும் சென்னையில் இருந்து கிளம்பும்போது விமானங்கள் தாமதமாக கிளம்பியது என்பதும் ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று இரண்டாவது நாளாகவும் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இலங்கை - சென்னை மற்றும் சென்னை - இலங்கை செல்லும் இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இலங்கை - சென்னை ஏர் இந்தியா விமானமும், அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானமும் தாமதமாக புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மழைநீர் தேங்கி இருக்கும் ரன்வே பகுதியில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments