Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புறநகரில் தீம் பார்க்.. 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு;

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:47 IST)
சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதுவரை சென்னை உள்பட பல நகரங்களில் தனியார் மட்டுமே தீம் பார்க் அமைத்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா துறையே தீம் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளது. 
 
சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோ போல் சென்னையில் பிரமாண்டமாக இந்த தீம் பார்க் அமையும் என்றும் உலக தரத்துடன் அமைய உள்ள இந்த தீம் பார்க் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments