Publish Date: Mon, 22 Jul 2024 (20:55 IST)
Updated Date: Mon, 22 Jul 2024 (21:01 IST)
ஆகஸ்ட் 3 முதல் 14 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் ரயில் மின்சார சேவைகள் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படுவதாகவும், ஆனால் இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.30 வரை மட்டும் முன்பு அறிவித்தது போலவே ரயில்கள் ரத்து என்றும், சென்னையில் பகல் நேரத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை முதல் ஆகஸ்ட் 2 வரை பகல் நேரத்தில் வழக்கமான கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், வரும் சனி, ஞாயிறு அதாவது ஜூலை 27 மற்றும் ஜூலை 28 மட்டும் காலை மற்றும் இரவு நேரங்களில் மின்சார ரயில்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரங்கள் இதோ: