Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பரோட்டா சாப்பிட்ட மாணவர் மரணம்? – அதிர்ச்சி சம்பவம்!

Tamilnadu
Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:24 IST)
சென்னையில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சிபி. இவர் நேற்று இரவு நேர சிற்றுண்டி உணவகம் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று படுத்துள்ளார். சில மணி நேரங்களில் அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் சிபி மூச்சுதிணறலால் உயிரிழந்துள்ளார். சிபி மரணத்திற்கு அவர் சாப்பிட்ட பரோட்டாவே காரணம் என அவரது உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட பரோட்டாதான் காரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments