Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி தளங்கள் நாட்டின் அமைதியை குலைக்க பார்க்கின்றன – மோகன் பகவத் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:10 IST)
ஓடிடி தளங்கள் இந்திய இளைஞர்களிடையே கெடுதல்களை விதைப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீப காலமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் இந்தியா சார்ந்த இணைய தொடர்கள் இந்து மதத்தை திட்டமிட்டு கீழ்மைபடுத்துவதாக தொடர்ந்து பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். முக்கியமாக இந்தியில் வெளியான சாக்ரட் கேம்ஸ், ஆஷ்ரம், தாண்டவ் உள்ளிட்ட வெப் சிரிஸ்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் “இந்தியாவின் அமைதியை குலைக்கவும், சாதி மத பிரிவினையை ஏற்படுத்தவும் பல்வேறு சதிகள் நடக்கின்றன. அவற்றை முறியடித்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இந்தியாவில் ஓடிடி தளங்கள் கட்டுப்பாடின்றி செயல்படுவது வருத்தமளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments