Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீ விபத்தால் ரூ.420 கோடி நஷ்டம்: இருப்பினும் 1ஆம் தேதியே சம்பளம் வழங்கிய சென்னை சில்க்ஸ்

தீ விபத்தால் ரூ.420 கோடி நஷ்டம்: இருப்பினும் 1ஆம் தேதியே சம்பளம் வழங்கிய சென்னை சில்க்ஸ்
, வெள்ளி, 2 ஜூன் 2017 (05:20 IST)
நேற்று முன் தினம் சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீப்பற்றி எரிந்து அதில் இருந்த ஜவுளிகள் அனைத்துமே சாம்பலாகின. இந்த தீவிபத்தில் சுமார் ரூ.420 கோடி நஷ்டம் ஆகியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.



 


இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருந்தும் சென்னை சில்க்ஸ் ஊழியர்களுக்கு நேற்று 1ஆம் தேதி எப்போதும்போல் சம்பளம் வழங்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் மாதம் என்பதால் ஊழியர்களின் அவசர தேவையை கணக்கில் கொண்டு சென்னை சில்க்ஸ் நிர்வாகம் முழு சம்பளத்தையும் வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னக் சில்க்ஸ் கடையில் பணிபுரிந்த 1300 பணியாளர்களை மதுரை, கோவை உள்பட பல நகரங்களில் இயங்கி வரும் 17 கிளைகளுக்கு பிரித்து பணியமர்த்தவும் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ரூ.420 கோடி நஷ்டம் அடைந்தாலும் ஊழியர்களின் இக்கட்டான புரிந்து கொண்ட சென்னை சில்க்ஸ் நிர்வாகத்தினர்களுக்கு ஊழியர்கள் நன்றி கூறினர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்மார்ட்போன் உறையில் காபி மிஷின்