Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
புதன், 12 மார்ச் 2025 (08:14 IST)
சென்னையில் நேற்று பல பகுதிகளில் மழை பெய்த நிலையில், இன்றும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. குறிப்பாக, எழும்பூர், மாம்பலம், கிண்டி, ஆலந்தூர், ராயப்பேட்டை, மதுரவாயல், அயனாவரம், பெரம்பூர், அமைந்தகரை, ஆதம்பாக்கம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், தேனாம்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

கோடை காலம் தொடங்க இருக்கின்ற நிலையில், சென்னையில் மழை பெய்ததால் பல இடங்களில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று புதன்கிழமை சென்னையின் நகர்ப்புற பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சென்னை மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments