Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயது சிறுமியிடம் ஆபாச படம் காட்டிய அரசியல் பிரமுகர் கைது!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (21:38 IST)
சென்னையில் 13 வயது சிறுமி ஒருவரிடம் ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அரசியல் பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேந்த 68 வயது ரவி என்பவர் அந்த பகுதியில் அரசியல் பிரமுகராக இருந்து வருகிறார். இவர், 13 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
 
இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் உடனடியாக ரவியை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போக்சோ சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்டவர் அரசியல் பிரமுகர் என்பதால் அவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன் கட்சியினர் மற்றும் உறவினர்கள் திடீரென சாலைமறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக கலைந்து செல்லும்படி கூறியபின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதனால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்