Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் விற்கக்கூடாது! – சென்னை போலீஸ் எச்சரிக்கை!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (11:36 IST)
சென்னையில் போதை தரும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி விற்க கூடாது என மருந்தகங்களுக்கு சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் மருந்தகங்கள் பல செயல்படும் நிலையில் பொதுவாகவே மக்கள் பலர் தங்கள் நோய்களுக்கு மருத்துவமனை செல்லாமல் மருந்தகங்களிலேயே நேரடியாக மாத்திரைகள் வாங்கி கொள்வது தொடர்கிறது. அதேசமயம் தூக்க மாத்திரை உள்ளிட்ட போதை உருவாக்கும் மருந்து, மாத்திரைகளும் கூட மருத்துவர் பரிந்துரையின்றி மருந்தகங்கள் விற்பதாக புகார் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மருந்தகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி விற்பனை செய்தால் சம்பந்தபட்ட மருந்தகங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments