Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விநாயகர் சிலை வைக்க முயற்சி! – இந்து முன்னணியை தடுத்த போலீஸ்!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (08:48 IST)
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடுகள் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைத்தல், ஊர்வலம் செல்லுதல் மற்றும் வழிபடுதல் ஆகியவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் விநாயகர் சிலைகளை அமைத்தே தீருவோம் என இந்து முன்னணி போன்ற அமைப்புகள் விடாபிடியாக உள்ளன. மேலும் பாஜகவும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகே விநாயகர் சிலை அமைப்பதற்காக இந்து முன்னணி அமைப்பினர் பந்தக்கால் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார் பந்தகால் நடும் பணியை தடுத்து அவர்களை அனுப்பிவிட்டு பந்தகாலையும் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments