இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: மெகா திட்டத்தை முடுக்கி விட்ட அரசு!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (08:38 IST)
விரைவில் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 
 
தற்போது புத்தக வடிவிலான பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்டை அடுத்த ஆண்டு முதல் நாட்டில் அனைவருக்கும் வழங்குவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தற்போது சோதனை முயற்சியாக முதலில் 20,000 அரசு அதிகாரிகள் மற்றும் தூதரகங்களில் பணிபுரிவோருக்கு இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி மற்றும் சென்னையில் பிரத்யேக கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. 
 
விரைவில் 36 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இ-பாஸ்போர்ட் விநியோகம் செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும் வழக்கமாக பாஸ்போர்ட் வழங்கும் முறையும் பாதிக்காத வகையில் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments