Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்லைடு ப்ளேட் போட்டு போக்கு காட்டும் ரேஸர்ஸ்! – சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:54 IST)
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடும் பலர் ஸ்லைடு நம்பர் ப்ளேட்டை பயன்படுத்தும் நிலையில் சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் சாலைகளில் பைக் ரேஸ் செய்யும் இளைஞர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக சாலைகளில் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க சென்னை போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலும் இப்படியாக ரேஸ் செய்பவர்களை வண்டியின் நம்பர் ப்ளேட்டை கொண்டு கண்டுபிடித்து விடலாம். ஆனால் ரேஸ் பைக்கர்கள் சமீப காலமாக ஸ்லைடிங் நம்பர் ப்ளேட்டை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நம்பரை மறைய வைக்க முடியும் என்பது அவர்களை பிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாய் உள்ளது.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ள சென்னை போலீஸார் அண்ணாசாலை மற்றும் ஆலந்தூரில் செயல்பட்டு வந்த ஸ்லைடிங் நம்பர் போர்டு விற்கும் கடை உரிமையாளர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த ஸ்லைடிங் நம்பர் போர்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments