Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! இரண்டாவது கணவருடன் சிக்கினார்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (11:28 IST)
சென்னையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் தனது இரண்டாவது கணவருடன் போலீஸில் பிடிபட்டுள்ளார்.

சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மூத்த மகன் நடராஜன் என்பவர் ஒரு பேக்கரியில் வேலை செய்தபோது 28 வயதான அபிநயா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

பின்னர் இருவருக்கும் சில மாதங்கள் முன்னதாக திருமணம் நடந்த நிலையில் சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அபிநயா வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்து கொண்டு மாயமானார். இதுகுறித்து நடராஜன் வீட்டார் போலீஸில் புகார் அளித்த நிலையில் 40 நாட்கள் கழித்து மகாபலிபுரசாலையில் உள்ள விடுதி ஒன்றில் அபிநயா பிடிப்பட்டுள்ளார். அவருடன் வேறு ஒரு நபரும் இருந்துள்ளார். விசாரித்ததில் அவர் அபிநயாவின் இரண்டாவது கணவர் என தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் அபிநயா இதுவரை 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது, அதில் இரண்டாவது கணவரான செந்தில் குமாரோடு வாழ்ந்தபோது அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு 8 வயதில் மகன் ஒருவனும் உள்ளார். நான்காவதாக திருமணம் செய்த நடராஜன் வீட்டிலிருந்து திருடி நகைகளை விற்று அபிநயாவும், இரண்டாவது கணவர் செந்தில்குமாரும் செலவு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments