3 நாட்களாக முடங்கியிருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை.. இப்போதைய நிலை என்ன?

Siva
திங்கள், 2 செப்டம்பர் 2024 (12:36 IST)
கடந்த மூன்று நாட்களாக பாஸ்போர்ட் இணையதள சேவை முடங்கி இருந்த நிலையில் இன்று முதல் சீரானது என தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 29ஆம் தேதி இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பாஸ்போர்ட் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்று நாட்களாக முடக்கி வைக்கப்பட்ட பாஸ்போர்ட் இணையதள சேவை தற்போது சீரானதாகவும் இன்று காலை முதல் இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது என்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் தேதி நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த நேர்காணல் குறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக முடங்கி இருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை தற்போது சீரானதை அடுத்து பாஸ்போர்ட் எடுக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments