Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடி மேம்பாலத்திலிருந்து பயணி விழுந்து சாவு! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (15:08 IST)
சென்னையில் பாடி மேம்பாலத்தில் மது அருந்திய ஆட்டோ டிரைவர் ஏற்படுத்திய விபத்தில் பயணி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் டிவி மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் பாக்கியராஜ். நேற்று முன்தினம் இவர் தனது நண்பரை சந்தித்துவிட்டு பிரபாகரன் என்பவரது ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். ஆட்டோ பாடி மேம்பாலத்தில் செல்லும்போது மது அருந்தியிருந்த பிரபாகரன் வேகமாக சென்று பாலத்தின் தடுப்பில் மோதியதால் பாக்கியராஜ் தவறி விழுந்தார்.

பாலத்தின் மீதிருந்து 25 அடி உயர பள்ளத்தில் விழுந்ததில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. 14 தமிழக மீனவர்கள் காயம்..!

கோவா கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல். பரிதாபமாக பலியான 6 பேர்!

நாளை நடைபெறுகிறது நீட் தேர்வு.. மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்..!

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments