Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நெல்லை வந்தே பாரத்.. அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை ஹவுஸ்புல்..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (15:40 IST)
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில், இன்று பாரத பிரதமரால் துவக்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை டிக்கெட் இல்லை என்றும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நாளை திங்கள் முதல் அடுத்த திங்கள் வரை முழு அளவிலான டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாகவும் தற்போது வெயிட்டிங் லிஸ்ட்கள் மட்டுமே இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமைகளில் இருந்து தான் டிக்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரயில்  இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் அதிரடியாக ஒரு வாரத்துக்கு முதல் நாளே புக் ஆகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பதும் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் இரவு 10.40க்கு நெல்லை சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments