Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 4 சுங்கச் சாவடிகள் மூடல்! – வாகன ஒட்டிகள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (09:35 IST)
தமிழக சட்டசபையில் அறிவித்தப்படி இன்று முதல் சென்னை அருகேயுள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 12 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்கள் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் அப்போதைய பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளாக இருந்த பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, கலைஞர் சாலை ஆகிய நான்கு இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டன.

ஆனால் தற்போது அவை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில் தொடர்ந்து சுங்கசாவடிகள் செயல்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் மெட்ரோ பணிகள் தொடங்கப்படுவதால் இந்த சுங்கசாவடிகள் செயல்படாது என சட்டசபையில் அமைச்சர் ஏ.வெ.வேலு கூறியிருந்தார்.

அதன்படி இன்றுமுதல் மேற்கண்ட 4 சுங்க சாவடிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments