Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை நந்தனம் ஆண்கள் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்: அரசாணை வெளியீடு

Mahendran
வெள்ளி, 14 ஜூன் 2024 (19:04 IST)
சென்னை நந்தனம் கல்லூரி இதுவரை ஆண்கள் மட்டும் பயிலும் கல்லூரியாக இருந்த நிலையில் தற்போது இருபாலர் கல்லூரி ஆக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் பெண்களுக்கான கல்லூரி மிகவும் குறைவு என்பதால் மாணவியர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைப்பது கஷ்டமாக இருப்பதாகவும் எனவே சில ஆண்கள் கல்லூரியை இருபாலர் கல்லூரி ஆக மாற்ற வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கை இழந்து வந்தது.

அந்த வகையில் தற்போது சென்னை நந்தனம் ஆண்கள் கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரி ஆக மாற்றி தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 'அரசு கலைக்கல்லூரி, நந்தனம்' எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

விஷச்சாராயம் விவகாரத்தல் விக்கிரவாண்டியில் திமுக தோல்வி அடையும்..! ஹெச்.ராஜா

நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெறிந்த பாஜக உறுப்பினர்... சென்னை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..! ஜெயக்குமார் வலியுறுத்தல்..!!

கள்ளச்சாராய விவகாரம்.! வி.சி.க. போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments