Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்றாவது கணவருடன் சண்டை; மகளை எரித்த தாய்! – சென்னையில் அதிர்ச்சி!

மூன்றாவது கணவருடன் சண்டை; மகளை எரித்த தாய்! – சென்னையில் அதிர்ச்சி!
, திங்கள், 31 ஜனவரி 2022 (11:16 IST)
சென்னையில் மூன்றாவது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மகளை தாயே கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் தனது மூன்றாவது கணவருடன் வசித்து வந்துள்ளார். இரண்டாவது கணவன் மூலமாக இவருக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஜெயலட்சுமிக்கும் அவரது மூன்றாவது கணவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த சண்டையின்போது ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது 10 வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஜெயலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு!