Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணபவன் உணவகத்திற்கு சீல் வைத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழும(CMDA) அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (13:35 IST)
சென்னை: சென்னை கே.கே நகரில் இயங்கிவரும் சரவணபவன் உணவகம் முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியதால் சி.எம்.டி.ஏ(CMDA) அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 
சென்னை கே.கே நகர் அசோக் பில்லர் சாலையில் இயங்கி வந்த சரவணபவன் உணவகத்தை இன்று காலை, சென்னை சி.எம்.டி.ஏ அதிகாரிகள்  சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் கட்டிட உரிமையாளர்  மாநகராட்சியில் இருந்து முறையான அனுமதி பெறாமல்  இரண்டாவது தளத்தை கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவகத்தை மூடி சீல் வைத்துள்ளனர். விதிமீறலின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் ராயப்பேட்டையில் உள்ள சரவணபவன் உணவகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments