Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில் 3வது வழித்தடத்தின் சுரங்கம் தோண்டும் பணி.. முக்கிய தகவல்..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (20:01 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் மூன்றாவது தடத்தின் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த திட்டத்தில் ஏழு சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 3. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45 கிலோமீட்டர் நீளத்தில் 15 மெட்ரோ நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டர் நீளத்தில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான ஒன்பது கிலோ மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாதை கட்டும் பணி சில மாதங்களாக நடந்த நிலையில் இந்த பகுதியில் மட்டும் ஏழு சுரங்கங்கள் கட்டப்படுகிறது.

இந்த ஏழு சுரங்கங்களின் பணி முடிவடைந்து விட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டு மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவேறியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments