Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பனகல் பூங்காவில் சுரங்கப் பணி தொடங்குவது எப்போது?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (13:04 IST)
சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி மூன்றாவது வாரம் முதல் பனகல் பார்க் பகுதியில் சுரங்கம் தோன்றும் பணி தொடங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கபாதையாகவும் அதன் பின் உயர்மட்ட பாதையாகவும் இந்த ரயில் பாதை அமைய உள்ளது. 

ALSO READ: 2 வருடங்களுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.91 பரிசு: இன்ப அதிர்ச்சியில் இளம்பெண்..!
 
9 சுரங்க ரயில் நிலையங்கள் 18 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் உருவாக இருக்கும் இந்த திட்டத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் பனகல் பார்க் பகுதியில் ஜனவரி 3வது வாரம் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் என்றும் இந்த பணிக்காக சுரங்கம் தோண்டும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments