நாளை முதல் கட்டணம் தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (16:37 IST)
சென்னை மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் நாளை முதல் அதாவது ஜூன் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயில் பயணம் செய்யலாம் என்றும் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன கட்டணம் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பொறுத்தவரை கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ ரயிலில் மேற்கொண்ட பயணங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. 
 
இந்த கட்டணம்  தள்ளுபடி குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் https://chennaimetrorail.org/parking-tariff/ என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments