Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோவில் அதிக பயணம் செய்தால் பரிசு.. அதிரடி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (12:45 IST)
சென்னை மெட்ரோ ரயில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில்களில் செல்லும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த 10 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் என்பவர் 30 பேருக்கு தலா ரூபாய் 2000 என மொத்தம் 60 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை பயணிகளுக்கு வழங்கினார். 
 
இந்த நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மார்க் மெட்ரோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பரிசு பொருள்களை வழங்குகின்றன. 
 
ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் அதிக அளவில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments