Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று காலை 10 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Chennai Rain

Siva

, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (07:47 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று காலை 10 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அதேபோல் சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கண்ட ஆறு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கதி என்ன? அமைச்சரவை கூட்டத்தில் விடிவு பிறக்குமா.? திமுக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை.!!