Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (13:15 IST)
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடும் வெயில் அடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் திகமான வெயில் அடித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும் என்றும் இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் அடுத்து இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி அதிகமாக இருக்கும் என்றும் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments