Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சற்றே குறைந்தது கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு?

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (11:52 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் 11 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று 10 ஆயிரம் என்ற அளவில் சற்றே குறைந்துள்ளதாக மத்திய சுகாதார துறையை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,720 என அதிகரித்துள்ளது.
 
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த புதன் கிழமை10,158 பேரும், வியாழக்கிழமை,11,109 பேரும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 24 மணி நெரத்தில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்திருக்கிறது.
 
மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 211 என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments