Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

Advertiesment
இன்னும் 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்
, வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (07:54 IST)
தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
நேற்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்த நிலையில் இன்றும் அதே மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய பகுதிகளில் நாளை  இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழுமலையான் கோவிலில் கூடுதல் இலவச டிக்கெட்டுக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு