Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Advertiesment
chennai
, வெள்ளி, 16 ஜூலை 2021 (07:59 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மற்றும் ஜூலை 18 19 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
 
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் 
 
நாளை நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்
 
ஜூலை 18 19 ஆகிய தேதிகளில் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் 
 
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொங்கு நாட்டு முதல்வர் ஈஸ்வரன்: சுவர் விளம்பரத்தால் சர்ச்சை