Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (13:08 IST)
நாளை முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை எதுவும் இல்லை என்பதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் கோடை காலம் தொடங்க உள்ளதை அடுத்து படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் இப்போதே தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நாளை முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் கீழ் திசை காற்றால் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தொடர்ந்து வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments