Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2023 (08:29 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பெருங்கடலின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் காற்றழுத்து தாழ்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த காற்றழுத்து தாழ்வு வலுப்பெற்று நகரும் என்பதால் தமிழகத்தின் கடற்கரை ஓர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிவிப்பு ஒன்றில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது
 
இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments