தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? வானிலை அறிவிப்பு!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (15:06 IST)
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த வானிலை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவு பெற்ற போதிலும் காற்று திசை வேகம் மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் நாளை முதல் 29ஆம் தேதி வரை தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments