Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் கொளுத்தும்: வானிலை மையத்தின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (14:44 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. மீண்டும் அக்னி நட்சத்திரம் கிளம்பிவிட்டதோ என்ற ஐயம் ஏற்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. 
 
இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments