Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரீனா மூடப்படுமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பரபரப்பு

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:04 IST)
மெரீனா மூடப்படுமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பரபரப்பு
சென்னை மெரினா கடற்கரையில் சமீபத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் மெரினாவை மூடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மெரினாவுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை மெரினாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து சென்னை மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மெரினாவில் குவிந்தனர். இந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் மெரினாவில் குவிந்து வருவதை அடுத்து மக்கள் மிக அதிக அளவுக்கு மீறி கூடினால் சென்னை மெரினாவை மீண்டும் மூடப்படும் நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சியின் துணை மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments