சென்னையில் மாரத்தான் போட்டி: நாளை போக்குவரத்து மாற்றம்

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (13:12 IST)
சென்னையில் மாரத்தான் போட்டி: நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற இருப்பதை அடுத்து ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
 
சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற உள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை காவல்துறை மத்திய கைலாசத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ள 
 
மேலும் காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ், காந்தி மண்டபத்தில் இருந்து வருவோர் எல்பி சாலை மற்றும் சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments