Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு நோட்டீஸ்

edappadi
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:07 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு காலத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு செய்ததாக அரப்போர் இயக்கம் குற்றம் சாட்டி இருந்தது
 
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதற்காக மானநஷ்ட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் மானநஷ்ட மனுவுக்கு விளக்கம் கேட்டு அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது 
 
மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: மொத்த பாதிப்பு 5ஆக உயர்வு!