புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

Mahendran
வெள்ளி, 5 ஜூலை 2024 (12:30 IST)
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 8ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 3 புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
 
இந்த நிலையில் ஜூலை 8ல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக நாடாளுமன்றத்தில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குற்றவியல் சட்டங்களுக்கு ’பாரதிய நியாய சன்ஹிதா’ என இந்தி, சமஸ்கிருதம் கலந்து பெயர் வைத்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயரிட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிலுக்கு அனுப்புவேன் என ஆசிரியை மிரட்டல்.. பயத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

5 மேஜைகளா? 8 மேஜைகளா? உடற்கூராய்வில் ஏன் இந்த குழப்பம்: அண்ணாமலை கேள்வி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. எத்தனை சதவீதம்?

கரூர் வந்தது சிபிஐ விசாரணை குழு.. பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்..!

உண்மை வெளிவரும்.. நான் இருக்கேன் கலங்காதீங்க! - புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளை தேற்றிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments