Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Mahendran
புதன், 10 ஜனவரி 2024 (11:32 IST)
வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா என்றும்  பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் நேரத்தில் வேலை நிறுத்தம் செய்வது சரியில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இந்த விசாரணையின் போது பொங்கல் பண்டிகையின் போது வேலை  நிறுத்த போராட்டம் போக்குவரத்து தொழிலாளர்கள் செய்வது தேவையா என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏன் இந்த இடையூறு என்றும் கேள்வி எழுப்பினார்.
 
நகரத்தில் உள்ள மக்கள் அதிக பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும் போராட்டம் நடத்த உரிமை இல்லை என்ற கூறவில்லை, ஆனால் தற்போதைய பண்டிகை நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments