Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்: தாமாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்..!

Mahendran
திங்கள், 22 ஜூலை 2024 (15:41 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை எழும்பூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை மற்றொரு வழக்கறிஞர் மாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது 
ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின் அடிப்படையில் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரியும், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
 
இந்த முறையீடை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுக்கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் கவலையில்லை: திருமாவளவன்

வேலை செய்யும் பெண் ஊழியர்களை பட்டதாரியாக்கிய திருப்பூர் நிறுவனம்.. குவியும் வாழ்த்துக்கள்..

சிறையில் இருந்து விடுதலையாகிறார் கெஜ்ரிவால்.! சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

தினமும் 2 கிலோ இறைச்சி சாப்பிடும் பாடி பில்டர்.. 36 வயதில் மாரடைப்பில் மரணம்..!

தலைமைச் செயலகத்தில் பெண் செய்தியாளருக்கு மிரட்டல்.. குவியும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments