Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: மூடப்படுமா டாஸ்மாக் கடைகள்? – மதுவிரும்பிகள் கவலை!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (12:44 IST)
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வணிக வளாகங்களை மூடுவது போல கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும் என கோரப்பட்டுள்ளது. டாஸ்மாக் மற்றும் அதை ஒட்டி இயங்கும் பார்கள் சுகாதாரமற்றவையாக இருப்பதால் கொரோனா பரவும் ஆபத்து அதில் அதிகம் இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு குறித்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம் இதுகுறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் டாஸ்மாக் மூடப்பட்டுவிடுமோ என மது விரும்பிகள் இடையே பதட்டம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments