Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவில் திருப்பணிக்கு பணம் வசூலித்த விவகாரம்: கார்த்திக் கோபிநாத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

karthick gopinath
, செவ்வாய், 7 ஜூன் 2022 (16:59 IST)
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக வழக்கு விவகாரத்தில் தனிப்பட்ட வங்கிக் கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையும் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி! வென்றால் செஸ் ஒலிம்பியாட் செல்ல வாய்ப்பு!