Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் கார் ஓட்டுபவர்களுடன் செல்லும் நபர்கள் மீதும் வழக்கு தொடரலாம்: சென்னை ஐகோர்ட்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:27 IST)
போதையில் கார் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் செல்பவர்கள் மீதும் வழக்கு தொடரலாம் என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை மெரினா கடற்கரை சாலையில் மதுபோதையில் அன்பு சூர்யா என்பவர் ஓட்டிய கார் மோதி 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவருடன் காரில் பயணம் செய்த பெண் மருத்துவர் ஒருவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது
 
ஆனால் இந்த கோரிக்கைக்கு ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருடன் பயணம் செய்பவர்களுக்கும் விபத்தில் சமமான பொறுப்பு உள்ளது என்றும் எனவே மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருடன் பயணம் செய்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments