Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்டு பாய்க்கு உதவியாளராக பணி! – பைக் ரேஸர்களுக்கு நூதன தண்டனை!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:27 IST)
சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக பைக் ரேஸ் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் இருக்க, பொதுமக்களுக்கு இடையூறாக பொதுவெளியில் பைக் ரேஸ் நடத்துபவர்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இரவு, பகல் பாராமல் இவர்கள் நடத்தும் ரேஸ் விளையாட்டு பல சமயங்களில் விபத்து உள்ளிட்ட ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் சென்னையில் ரேஸ் செல்ல முயன்ற பைக் ரேஸர்களை போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் மீதான ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாய்க்கு உதவியாளராக ஒரு மாதம் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் நூதனமான இந்த தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments