Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கு! – தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (12:24 IST)
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரனையில் தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மோகத்தால் பலர் பணத்தை இழப்பதால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் செயலிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.

தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டன. அதன் மீதான இன்றைய விசாரணையில் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மீதான தடைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மறுத்துள்ள நீதிமன்றம் டிசம்பர் 21க்குள் இதுதொடர்பான விளக்க அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments