Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பத்தி என்ன பேசணும்? நான் ரெடி.. வாங்க! – ஆ.ராசாவுக்கு ஜோதி சவால்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (12:09 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி திமுகவின் ஆ.ராசா பல இடங்களில் அவதூறாக பேசி வருவதால் அவருடன் விவாதிக்க தயார் என வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக இடையேயான வாக்குவாதங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக முன்னாள் அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து பல இடங்களில் பேசி வரும் ஆ.ராசா நீதிமன்ற தீர்ப்பில் அவரை குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளதாகவும் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் நான் விவாதிக்க தயார் என சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார். மேலும் “ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர் என்றும், கொள்ளைக்காரி என்றும் நீதிமன்ற தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவரது பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும்” என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments