Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விலகலா? பெரும் பரபரப்பு

Advertiesment
சென்னை உயர்நீதிமன்றம்
, வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (21:17 IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக சமீபத்தில்  நியமிக்கப்பட்டார். இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதால் தஹில் ரமானி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
 
 
மிகப்பெரிய நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் மேகாலாயா போன்ற சிறிய மாநிலத்தின் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது அசாதாரணமானது என்று சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் தஹில் ரமானி எதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளார் என்பது குறித்த காரணமும் இதுவரை தெரியவில்லை
 
 
இந்த நிலையில் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து நீதிபதி தஹில் ரமானி  ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைனில் சினிமா டிக்கெட்டுகள் விற்பனைக்கு ஆதரவு குவிகிறது- அமைச்சர் கடம்பூர் ராஜூ