Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சத்தை ஒழிக்க சிசிடிவி கேமரா… வழக்கு தொடர்ந்த நபருக்கு அபராதம்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (11:16 IST)
லஞ்சத்தை ஒழிக்க அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என மனு அளித்தவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சிலவற்றில் அவ்வபோது லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டால் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பல பகுதிகளில் லஞ்சம் வாங்குவது தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை ஒழிக்க அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் வழக்குத் தொடர தடையும் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments