Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

Prasanth K
ஞாயிறு, 6 ஜூலை 2025 (13:12 IST)

கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மின்சார பேருந்து வசதிகள் சில வழித்தடங்களில் கோளாறை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சென்னையில் பேருந்துகளால் ஏற்படும் புகை மாசை குறைக்கும் வகையில் புதிதாக மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னையின் பல முக்கிய வழித்தடங்களில் இந்த மின்சார பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளே ஒரு பேருந்து ஸ்டான்லி மருத்துவமனை அருகே கோளாறு காரணமாக நின்றது. தொழில்நுட்ப பிரிவினர் வந்தும் சரிசெய்ய முடியாததால் அந்த பேருந்து டோவ் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்நிலையில் தொடர்ந்து வேறு சில இடங்களிலும் மின்சார பேருந்துகள் சிக்கலை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் பேருந்தின் பேட்டரி பாதி வழியிலேயே தீர்ந்து போய் விடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மின்சார பேருந்துகள் இயக்குபவர்களுக்கு, பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் இதுகுறித்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. 

 

Edit by Prasanth

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முல்லை பெரியாறு தந்த பென்னிக்குயிக்! குடும்பத்தினரை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின்!

செங்கோட்டையனை அடுத்து சத்யபாமாவும் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்ற ஓபிஎஸ் அணியினர்! - அதிமுகவில் அடுத்தடுத்து ட்விஸ்ட்!

திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! தளபதி 2026 அரசியல் பிரச்சார பயணம் அப்டேட்!

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் அனுமதியை ரத்து செய்யாதது ஏன்? - அன்புமணி கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments