Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

Prasanth K
ஞாயிறு, 6 ஜூலை 2025 (13:12 IST)

கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மின்சார பேருந்து வசதிகள் சில வழித்தடங்களில் கோளாறை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சென்னையில் பேருந்துகளால் ஏற்படும் புகை மாசை குறைக்கும் வகையில் புதிதாக மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னையின் பல முக்கிய வழித்தடங்களில் இந்த மின்சார பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளே ஒரு பேருந்து ஸ்டான்லி மருத்துவமனை அருகே கோளாறு காரணமாக நின்றது. தொழில்நுட்ப பிரிவினர் வந்தும் சரிசெய்ய முடியாததால் அந்த பேருந்து டோவ் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்நிலையில் தொடர்ந்து வேறு சில இடங்களிலும் மின்சார பேருந்துகள் சிக்கலை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் பேருந்தின் பேட்டரி பாதி வழியிலேயே தீர்ந்து போய் விடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மின்சார பேருந்துகள் இயக்குபவர்களுக்கு, பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் இதுகுறித்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. 

 

Edit by Prasanth

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments