Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: என்ன காரணம்?

சென்னை அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: என்ன காரணம்?
, வியாழன், 25 நவம்பர் 2021 (19:04 IST)
சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் மகேஸ்வரன் என்ற டாக்டர் நேற்று மாலை பணிமுடிந்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் அந்த அறையில் இன்று காலை டாக்டர் மகேஸ்வரன் வெகுநேரமாக வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் மாற்றுசாவி பயன்படுத்தி திறந்து பார்த்தனர் அப்போது மகேஸ்வரன் பிணமாக இருந்ததை பார்த்து உள்ளனர் என்பதும் அருகில் விஷ ஊசி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!