தீபாவளி பண்டிகை - 28 ஆயிரம் பேர் முன்பதிவு

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (18:32 IST)
தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல். 
 
ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தீபாவளி கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.
 
இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழக போக்குவரத்து துறையின் அரசு விரைவு பேருந்துகள், ஏசி பேருந்துகள், சொகுசு பேருந்துகள் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டது.
 
இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

டிரம்ப் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கருத்து..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments